இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய யாத்திரிகம் என்றி ஆல்பிரட் கிருட்ணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜாண் பான்யன் (John Bauyan) என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய 'புனிதப் பயணிகள் முன்னேற்றம்' என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim's Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
இந்நூல் ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்னும் ஐந்து பருவங்களையும் உடையது. இந்நூல் 3622 பாடல்களை, 144 இரட்சணிய யாத்திரிகத் தேவாரங்களையும் கொண்டுள்ளது. 1894 - ஆம் ஆண்டு கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தாரால் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் என்பதன் பொருள்,கடவுளால் இரட்சிக்கப்படுவது குறித்து உயிர் செய்யும் யாத்திரை என்பதாகும்.
Comments
Post a Comment