விழுதும் வேரும்

விழுதும் வேரும் தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேறோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! - பாரதிதாசன் சொற்பொருள்: திறல் – வலிமை மறவர் – வீரர் ஆசிரியர் குறிப்பு: பெயர் – பாரதிதாசன் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம் பெற்றோர் – கனகசபை,இலக்குமி ஊர் – புதுச்சேரி காலம் – 29.04.1891-21.04.1964 சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர் சிறப்பு: பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர். இயற்றிய நூல்கள்: பாண்டியன் பரிசு குடும்ப விளக்கு இருண்ட வீடு அழகின் சிரிப்பு கண்ணகி புரட்சிக் காப்பியம் குருஞ்சித்திட்டு தமிழியக்கம் பிசிராந்தையார்

Comments