விழுதும் வேரும்
தூலம்போல் வளர்கி ளைக்கு
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
ஆலினைச் சுற்றி நிற்கும்
அருந்திறல் மறவர்! வேறோ
வாலினைத் தரையில் வீழ்த்தி
மண்டிய பாம்பின் கூட்டம்!
நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்!
- பாரதிதாசன்
சொற்பொருள்:
திறல் – வலிமை
மறவர் – வீரர்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் – பாரதிதாசன்
இயற்பெயர் – கனக சுப்புரத்தினம்
பெற்றோர் – கனகசபை,இலக்குமி
ஊர் – புதுச்சேரி
காலம் – 29.04.1891-21.04.1964
சிறப்புப்பெயர்கள் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
சிறப்பு:
பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையைக் கவிதை வடிவில் தந்தவர்.
இயற்றிய நூல்கள்:
பாண்டியன் பரிசு
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
அழகின் சிரிப்பு
கண்ணகி புரட்சிக் காப்பியம்
குருஞ்சித்திட்டு
தமிழியக்கம்
பிசிராந்தையார்
Comments
Post a Comment