4.4 சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள்
சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாய்க் கொண்டு எழுந்தவையாகும். சமூகத்தில் காணும் குறைபாடுகளையும், சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. சமூகச் சிக்கல்களைக் கதைக்கருவாகக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. அவற்றிற்குத் தீர்வுகளையும் கண்டுள்ளன. சில சிறுகதைகள் புரட்சிக் கருத்துகளாகி நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன.
சிறுகதைகள், சமூகத்தை வெளிப்படுத்தும் அளவில் அவை சமூகக் கடமையாற்றுவதை அறிய முடிகிறது. அவை மக்களுக்குச் சமூகம் சார்ந்த அறிவினைக் கொடுத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமூகச் சிந்தனைகளுக்கும் இடம்தருகின்றன. இப்பகுதியில் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளாக மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காணலாம்.
4.4.1 மு. வரதராசனாரின் ‘குறட்டை ஒலி’
சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளில் முதலாவது சிறுகதையாக இது இடம்பெற்றுள்ளது. இதன் கதைச்சுருக்கத்தைப் பார்க்கலாம்.
Comments
Post a Comment