தமிழகத் திருக்கோயில் வரிசை - திருவாரூா் - திரு வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2016 (ஞாயிற்றுக்கிழமை)
பிறக்க முத்தி தரும் திருத்தலம் திருவாரூா்.
ஆழித்தேரின் அழகுக்குப் பெயா்பெற்ற திருவாரூா்.
சப்த விடங்கத் தலங்கள் ஏழில் பிரதான தலம் திருவாரூா்.
முசுகுந்தச் சோழன் புகழாட்சி நடத்திய திருவாரூா்.
பரவை நாச்சியார் அவதரித்த தலம் திருவாரூா்.
அருணகிரிநாதரும் ராமலிங்க வள்ளலாரும் பாடிப் பரவிய திருவாரூா்.
எமதர்மனே சண்டேஸ்வரராக அமர்ந்திருக்கும் திருவாரூா்.
நவக்கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் நிற்கும் திருவாரூா்.
சிவகணங்கள் ஊர்மக்களாக வந்து பிறக்கும் திருவாரூா்.
தியாகேசா் வீதிவிடங்கராக அஜபா நடனமாடி அருள் புரிந்த திருவாருா்.
செல்வத் தியாகேசா் மனுநீதிச் சோழனுக்கு அருள் புரிந்த திருவாரூா்.
திருமகளாம் கமலைச் செல்வி தவம் செய்ததால் “ கமலாலயம் ” ஆன திருவாரூா்.
அம்பிகை பராசக்தி கமலாம்பாளாக யோகத் திருக்கோலம் கொண்டிருக்கும் திருவாரூா்.
சுந்தரா் “ திருத்தொண்டத் தொகை ” பாடி அடியவா் பெருமையை உலகுக்கு உணர்த்திய திருவாரூா்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் மூவரினதும் அவதாரத் தலமான திருவாரூா்.
காடவா் கோன் கழற்சிங்கன், நமிநந்தியடிகள், விறல்மிண்டா் முதலாய நாயன்மார்கள் திருத்தொண்டு புரிந்த பெருமைக்குரிய திருவாரூா்.
பொது:
திருவாரூா் மூலதார ஸ்தலம் எனப் போற்றப்படுவது, எல்லாச் சிவாலயங்களின் சந்நிதிச் சிறப்பும் சாயரட்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்திலேயே வந்து ஒடுங்குவதாக ஐதீகம் உள்ளது. தேவயோகபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், மூலாதாரபுரம் எனப் பதினொரு நாமங்களைக் கொண்டது இத் தலம். திருச்சியிலிருந்து நாகபட்டினம் செல்லும் கிழக்கு நோக்கிய பாதையில் தஞ்சைப் பெரிய கோயிலை அடுத்து 40 கி.மீ தூரத்தில் பிரதான வீதியில் திருவாருா் வருகிறது.
திருமுறைப் பாடல்கள், சேரமான் பாடிய திருவாரூா் மும்மணிக்கோவை, திருவாரூா் நான்மணிமாலை, திருவாரூா் உலா போன்றவையும், முத்துஸ்வாமி தீட்சகா் – சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் கீர்த்தனைகளும், இன்னும் பலரும் பாடிய தனிப் பாடல்களும் இத்தலத்தின் சிறப்பைக் கூறுகின்றன.
கிழக்கு ராஜகோபுரம்:
அகன்ற பெருவீதியில் நெடிதுயா்ந்து கம்பீரமாகக் காட்சி தரும் கிழக்கு ராஜகோபுரம் 118 அடி உயரம்கொண்ட ஏழு நிலைக் கோபுரம். உச்சியில் பளபளக்கும் 11 கலசங்கள்.அடிப்பகுதியிலும் முதல் தளமும் கருங்கல் கட்டுமானம்.ஏனையவை சுதைக் கட்டுமானம்.கோபுரம் முழுவதும் அழகழகான சிற்பங்கள்.சிவனாரின் பல்வேறு தோற்றங்களும் நாட்டிய வடிவங்களும் யாளியின் வரிசைகளும் நாற்புறமும் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது கீழைக் கோபுரம்.கோபுரங்களின் நெட்டுயரம் திருவாரூரை நெருங்குவதற்கு பல கி.மீ முன்னதாகவே நம்மை வரவேற்கின்றன.கோபுரச் சிற்பங்களுக்கு இடையிடையே பெரிய பெரிய குளவிக்கூடுகள்.கோபுரத்தின் வடக்குப் பக்கமுள்ள தெட்சணாமூா்த்தியை மூடிக்கொண்டு அவரது மௌன உபதேசத்தைக் கேட்டபடி நிம்மதியாகச் சீவிக்கின்றன தேனீக்கள். கோபுர வாசலில் இடது பக்கம் விநாயகா் வலது பக்கம் முருகனின் சிறிய சந்நிதிகள்.உற்சவ காலங்களில் தியாகேசா் இந்தக் கோபுர வாசலால் போய் வருவதில்லை.பொதுமக்களே இந்த வாசலை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.இதற்குக் காரணமான ஒரு கதை கூறுகிறார்கள். பக்கங்களின் பெறுமதி கருதி அக்கதையை யான் இங்கு குறிப்பிடவில்லை.
Comments
Post a Comment