யோகக் கலை
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது

பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் நடராசரை வணங்கி நிற்கும் காட்சி

பத்மாசன நிலையில் யோக தியானம் புரியும் சிவனின் சிலை.
யோகக் கலை அல்லது யோகா (yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.[1]
யோகாவின் பல்வேறு மரபுகள் புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.யோகா 500ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. இந்து மதத்தில் யோகா திணிக்கப்பட்டுள்ளது. [2][3][4] மேலும் யோகா வஜ்ரயான(Hatha yoga) மற்றும் திபெத்திய(Rāja yoga) புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.[5][6][7]
வரலாறு தொகு
யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. [8]. சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.[9]. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
பதஞ்சலி யோக சூத்திரம் தொகு

டெல்லியிலுள்ள பிர்லாமந்திரில் இருக்கும் ஹிந்து யோகியின் சிலை
பதஞ்சலி மகரிஷி யோகாவை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தியுள்ளார். முறையான யோகசாஸ்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை பதஞ்சலியையே சாரும் என பெரும்பாலோர் கருதுகின்றனர். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் 185 சுருக்கமான சூத்திரங்களை கொண்டுள்ளது.[10] அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன. இந்த எட்டு-அங்க யோகா தத்துவம் 29வது சூத்திரம் 2வது புத்தகத்தின் சூத்திரம் தான் இன்று நடைமுறையில் இருந்து வரும் ஒவ்வொரு ராஜ யோகத்தின் ஆழ்ந்த குணாதிசயத்தைக் காட்டுகிறது.
Comments
Post a Comment