கடற்பயணம்

தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி. அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும். அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது. எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன. தமிழரின் கடற்பயணம்: "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும். தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது. தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும். யவனர்: தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர் கப்பல் கட்டுதல்: "கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர். அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன. புறநானூறு கூறும் உவமை: நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. கடலைக் குறிக்கும் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி. மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்: கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம். கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும். பட்டினப்பாலை: புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புரண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. துறைமுகங்கள்: காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை முசிறி: முசிறி சேரர் துறைமுகம். அங்குச் "சுள்ளி" என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன. யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது. கொற்கை: கொற்கை பாண்டிய துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார். மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என மதுரைக்காஞ்சி கூறுகிறது. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம். கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர். காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்): இது சோழர்களின் துறைமுகம். இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள். அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. ஏற்றுமதி இறக்குமதி: பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது. தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின. கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு பயிரிடப்பட்டது. கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப்பெற்று வருகின்றன. பட்டினப் பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் ஏற்றுமதியான பொருள்கள் - இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண் துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி.

Comments