பழமொழி நானூறு

பழமொழி நானூறு தமிழ் இலக்கியம் சங்க இலக்கிய நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்மேற்கணக்கு எட்டுத்தொகை நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண்கீழ்க்கணக்கு நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது இனியவை நாற்பது களவழி நாற்பது கார் நாற்பது ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது திருக்குறள் திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி ஏலாதி கைந்நிலை சங்கநூல் தரும் செய்திகள் தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம் சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள் சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள் சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள் சங்ககால விளையாட்டுகள் பா உ தொ பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.[சான்று தேவை]

Comments