இசையமுது

இசையமுது மழையே மழையே வா வா – நல்ல வானப் புனலே வா வா – இவ் வையத் தமுதே வா வா தகரப் பந்தல் தணதண வென்ன தாழும் கூரை சளசள வென்ன நகரப் பெண்கள் செப்புக் குடங்கள நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே…) தகரப் பந்தல் தணதண வென்ன தாழும் கூரை சளசள வென்ன நகரப் பெண்கள் செப்புக் குடங்கள நன்றெங் கும்கண கணகண வென்ன (மழையே மழையே…) ஏரிகுளங்கள் வழியும்படி, நாடு எங்கும், இன்பம் பொழியும்படி, பொடி வாரித்தூவும் பூவும் காயும் மரமும் தழையும் நனைந்திடும்படி (மழையே மழையே…) தழையா வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் உழுவார் எல்லாம் மலைபோல் எருதை ஒட்டிப் பொன்னேர் பூட்டவும் (மழையே மழையே…) – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்பொருள் : வானப்புனல் – மழைநீர். வையத்து அமுது – உலகின் அமுதம். வையம் – உலகம். தகரப்பந்தல் – தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல். பொடி – மகரந்தப் பொடி. தழை – செடி. தழையா வெப்பம் – பெருகும் வெப்பம். தழைக்கவும் – குறையவும். ஆசிரியர் குறிப்பு : பெயர் : பாரதிதாசன். இயற்பெயர் : சுப்புரத்தினம். சிறப்பு பெயர் : புரட்சிக் கவிஞர், பாவேந்தர். எழுதிய நூல்கள் : பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு. காலம் : 29.04.1891 முதல் 21.04.1964 வரை. இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட காதலால், தம்முடைய பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

Comments