பாரதிதாசன்
கவிஞர், எழுத்தாளர்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
பிறப்பு கனக. சுப்புரத்தினம்
ஏப்ரல் 29, 1891
புதுவை
இறப்பு ஏப்ரல் 21, 1964 (அகவை 72)
சென்னை
புனைப்பெயர் பாரதிதாசன்
தொழில் தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
கல்வி புலவர்
கல்வி நிலையம் கல்வே கல்லூரி, புதுவை
எழுதிய காலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
இலக்கிய வகை தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருட்கள் இனமானம், அரசியல்
இயக்கம் திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்) பாண்டியன் பரிசு
குறிப்பிடத்தக்க
விருது(கள்) சாகித்ய அகாதெமி விருது
துணைவர்(கள்) பழநி அம்மையார்
பிள்ளைகள் கோபதி,சரசுவதி, வசந்தா
Comments
Post a Comment