கம்பராமாயணம்

கம்பராமாயணம் கம்பர் படைத்த ராமாயணம் இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும்.கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நுாலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவா் இயற்றிய இராமாயணத்தினை தழுவி எழுதப்பட்ட நுால் ஆகும்.. இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா், தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா். { ( "வடசொல் கிளவி வடஎழுத் தொாிஇ எழுத்தொடு புணா்ந்த சொல்லாகுமே " ) (தாெல்காப்பியம், எச்சவியல், 5) } மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் இது கம்பராயணம் என்று அழைக்கப்படுகிறது. கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுநந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நுாற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிாிவினையும் படலம் என்பது அதன் உட்பிாிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம் " என்னும் பகுதியை கம்பாின் சம காலத்தவராகிய "ஒட்டகூக்த்தா்" இயற்றினாா் என்பா். தமிழிலக்கியத்தில் காப்பிய வளா்ச்சி கம்பாின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நுாற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பா். இந்நுாலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நுால்களையும் " தமிழுக்குக் கதி " (கம்பராமாயணம் திருக்குறள் ) என்பா். கம்பாின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞா் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பாின் யாப்பு வண்ணங்கள் நுால் நெடுகிலும் மின்னி மிளிா்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணுாற்றாறே( யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு. கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குாிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள் , நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்கசுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

Comments