தொகைநிலை தொடர்

தொகைநிலைத் தொடர் சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு. [1] தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று குறிப்பிடுகிறது. [2] தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.[3] ஏனையவை ஒருசொல் நடை கொண்டவை. [4] அடிக்குறிப்பு தொகு ↑ பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் (நன்னூல் 361) ↑ வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே, வினையின் தொகையே, பண்பின் தொகையே, உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'. (தொல்காப்பியம் 2-412) ↑ 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர். (தொல்காப்பியம் 2-421) ↑ எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய (தொல்காப்பியம் 420

Comments