சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலையம்மாள்
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
திருமதி. மு. அஞ்சலையம்மாள் கணவர் பெயர்: ரா. முருகப்ப படையாட்சி தாயார் பெயர் : அம்மாகண்ணு அம்மாள் தோற்றம்: 1890 முகவரி : 38 காந்தி பார்க்வீதி, கடலு}ர்
கல்வியில் குறைந்து அறிவிலும், துணிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த இந்த அஞ்சலையம்மாள் தென்னாற்காடு மாவட்டத்தின் வேலுநாச்சியாவார். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்கினார். 1927ல் நீலன் சிலையகற்றும் போரில் ஒரு ஆண்டு தண்டனை சென்னையில் 1931ல் உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் சிறை தண்டனை கடலு}ரில்.
1933ல் மறியல் போரில் மூன்ற மாத தண்டனை. 1940ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம் சிறை 1942ல் 8 மாதம் 2 வாரம் சிறை. ஆக மொத்தம் ஏழு போராட்டங்களில் பங்கேற்று நான்காண்டுகள் ஐந்தரை மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று கடலூர் . திருச்சி .வேலூர். பெல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.
தமிழ்நாட்டின் மதன்முதல் சத்யாக்கிரகத்தில் சிறை சென்றவர் எனக்கூறும் பெருமைக்குரியவர்களில் ஒருவர் இந்த அஞ்சலையம்மாள்.
திருமதி. மு. அஞ்சலையம்மாள் அவர்கள் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடலூரில் அஞ்சலையம்மாளைத் தெரியாத தேசபக்தர்கள் இருக்கமாட்டார்கள். குள்ளமான ஆனால் பருமனான உருவம் இவரைப்பார்க்க கிராமப் பெண்கள் கூட்டம் வரும் அவர்களிடையே கிராமிய நடையில் இனிமையாகப் பேசுவார் இவரது பேச்சில் பெணகள் வசிகரிக்கப்பட்டு தேசபக்தி கொண்டவர்களாகிவிடுவர். எந்த இடத்திலும் எந்த நிலையிலும் எந்த அதிகாரியிடமும் கலங்காது நின்று போராடும் வீராங்கனையாவார். இவரது மகளுக்கு லீலாவதி என்ற பெயரை காந்திமகான் வைத்தார்.
இவரது கணவர் முருகப்ப படையாட்சியும் ஒரு சுதந்திர போரட்ட வீரராவார். 1921ல் முருகப்பனும் குடிபழக்கம் உள்ளவராக இருந்தார் அச்சமயத்தில் 1927 ல் காந்தியடிகள் கெடில நதிக்கரையில் பேசியதைக் கேட்டு மதுவையும் சூதையும் இனி தொடுவதில்லை என சபதமேற்று புது மனிதராக மாறி சத்யாகிரகியானார்
இவரின் குடும்பமே தேச விடுதலையில் ஈடுபட்ட தியாகக் குடும்பமாகும் அஞ்சலையம்மாள் கருவுற்றிருந்தபோதே சிறை புகுந்தார் பேறு காலத்திற்காக விடுதலை தரவும் வீடு வந்து ஆண் குழந்தை பெற்றார் அவனுக்கு ஜெயவீரன் என்ற பெயிட்டு கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்றார்.
இவரது மகள் 9 வயதில் தாயுடன் நீல்சிலை சத்யாகிரகப்போரில் 4 ஆண்டு சிறை செனறார் லீலாதியின் கனவர் ஜமத்கனியும் ஒரு தியாகி ஆவார் .
தேச விடுதலை இயக்கத்தில் தன்னலமற்ற பாடுபட்ட இக்குடும்ப வறுமையினால் இவர்களது வீடும் கடனால் ஏலம் போனதை ஒரு புண்ணியவான் மீட்டுக் கொடுத்துள்ளார். இளமையில் சிறையில் தாய்ப்பால் அருந்திய ஜெயவீரன் இன்றும் நலமுடன் நம்மிடையே பு. முட்லூர் அருகிலுள்ள தீத்தான் பாளையத்தில் வசித்து வரு
Comments
Post a Comment